ஆந்திரத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி, 11 பேர் காயம்

ஆந்திரம் மாநிலம், அன்னமய்யா மாவட்டம் பெத்தம்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து போலீசார் தெரிவித்தாவது:
ஆந்திரம் மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பெத்தம்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு திருப்பதி ரூவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பலியானவர்களில் இரண்டு பேர் ஆண்கள், மூன்று பேர் பெண்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.