உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

உடப்பு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள் நேற்று கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்றபோது சடலம் ஒன்று கரையொதுங்கி கிடப்பதை அவதானித்தனர்.

பின்னர் சடலம் தொடர்பில் மீனவர்கள் உடனடியாக உடப்புப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்.

சடலத்தின் முகம், கை, கால் மற்றும் தலைப் பகுதிகள் முழுமையாக உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பெண்ணின் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காகப் புத்தளம் தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.