தொலைபேசியில் உரையாடிய மூதாட்டி மயங்கி விழுந்து சாவு.

தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த ஜெயேந்திரன் சோதிமலர் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அந்த மூதாட்டி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கிச் சரிந்துள்ளார்.

அதையாடுத்து அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

இந்நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனையில் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.