கொரொனொ காலமும் சின்மயியும்..

பாடகி சின்மயி 3000 பாடல்கள் பாடி, 85 லட்சம் நன்கொடையாகப் பெற்று அப் பணத்தினை, கொரொனொவால் வருவாய் இன்றி பாதிக்கப்பட்ட குடுப்ங்களுக்கு உதவியுள்ளார்.

விருப்பப்பட்ட் பாடலை இணைய தளம் மூலமாக அவரிடம் தெரிவித்தால் அவர் அப்பாடலைப் பாடுவார். அதனை வீடியோவாக பதிவேற்றியும் விடுவார். அதற்கு ஈடாக கிடைக்கும் பணத்தினைக் கொண்டும், உலகெங்கும் உள்ள நன்கொடையாளாரிடமிருந்து திரட்டிய நிதியினைக் கொண்டும்.  உதவி வேண்டும் குடும்பத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

ஊரடங்கு நீங்கிய பின்பும், மருத்துவம், கல்வி போன்ற செலவிற்காக அவர் இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.