பணயக்கைதிகளை விடுவிக்க ‘போர் நிறுத்தத்திற்கு’ அழைப்பு விடுக்கிறார் பைடன் (வீடியோ)

பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மினசோட்டாவில் நடைபெற்ற பேரணியில் காசா பகுதியில் போர்நிறுத்தம் கோரி பார்வையாளர்களில் இருந்த பெண் ஒருவருக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

“கைதிகளை வெளியே எடுப்பதற்கு எங்களுக்கு ஒரு போர் நிறுத்தம் தேவை என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

மனிதாபிமான உதவிகளை வழங்குவதையும், ஹமாஸ் போராளிகளால் பிடிபட்ட 240 பணயக்கைதிகளை மீட்பதற்காக ஜனாதிபதி போர் நிறுத்தம் ஒன்று தேவை எனக் குறிப்பிட்டதாக வெள்ளை மாளிகை பின்னர் அறிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.