அநுரவுடன் இந்தியத் தூதுவர் பேச்சு! – சமகால அரசியல் நிலைமை தொடர்பில் அலசல்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து நீண்ட நேரம் இருவரும் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் எல்டோஸ் மேத்யூவும் கலந்துகொண்டார்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்தும் சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.