புதிய iPhone ஆலை – தமிழகத்தின் ௐசூரில்…..

இந்தியாவின் ஆகப் பெரிய நிறுவனக் குழுமமான Tata, iPhone பாகங்களை ஒருங்கிணைப்பதற்கான புதிய ஆலை ஒன்றைக் கட்டவிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் நகரில் அது அமைக்கப்படவிருப்பதாக Bloomberg செய்தி நிறுவனம் கூறியது.

பாகங்களை ஒன்று சேர்க்கும் 20 உற்பத்தித் தடங்களை ஆலை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராண்டுக்குள் அங்கு 50,000 பேர் வேலைக்குச் சேர்க்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

Apple நிறுவனம் விரிவாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அனைத்துலக அளவில் iPhone உற்பத்தியில் இந்தியா 7 விழுக்காட்டுப் பங்கை வகிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.