மலேசியக் குடியுரிமை கிடைக்க , மலே மொழி முக்கியமா?

மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மலாய் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் மாற்றம் இல்லை என்று நாட்டின் மேலவையில் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பம் செய்பவரின் மலாய் மொழிப் புலமை எழுத்துபூர்வமாகவும் நேர்காணல் வாயிலாகவும் பரிசோதிக்கப்படும் என்று உள்துறைத் துணை அமைச்சர் சொன்னார்.

அவர்களுக்கு இருக்கும் புலமையின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

மலேசியக் குடியுரிமையை வழங்குவதில் மலாய் மொழிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

கடந்த மாத இறுதிவரை உள்துறை அமைச்சு 32,000 பேரிடம் இருந்து குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

அக்டோபர் வரை 10,381 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது.
ஆண்டுக்கு 10,000 பேருக்கு வழங்கும் இலக்கை அது தாண்டியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.