முன்னாள் சுகாதார செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜானக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹியூமன் இம்யூனோகுளோபுலின் ஊசி ஒப்பந்தத்தில் முன்னாள் சுகாதார செயலாளர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டது, இது சுகாதாரத் துறையில் வெட்கக்கேடான மோசடிகள் தொடர்பான அதிர்ச்சிகரமான வெளிப்பாடாகியிருந்தது.

நீதிமன்ற உத்தரவு காரணமாக வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார செயலாளர், மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போது , வாக்குமூலம் வழங்குவதற்காக சந்திரகுப்த இன்று (18) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்தார். .

இம்யூனோகுளோபின் ஊசி பரிவர்த்தனை தொடர்பாக தற்போது விளக்கமறியலில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளருக்கு தடுப்பூசி உற்பத்திக்கான இரத்த பிளாஸ்மாவை விடுவிக்க மறுத்த இரத்தமாற்ற நிலையத்தின் பணிப்பாளரிடம் , அப்போதைய சுகாதார செயலாளர் ஜனக சந்திரகுப்தா எழுத்துப்பூர்வமாக கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

2000 லிட்டர் ரத்த பிளாஸ்மா கொடுக்க வேண்டும் என்று சுகாதார செயலாளர் ஜனக சந்திரகுப்தா அதில் பரிந்துரை செய்திருந்தார்.

நாட்டிலுள்ள மருந்து உற்பத்தி நிறுவனமொன்றில் மனித இம்யூனோகுளோபுலின் பிளாஸ்மாவை உருவாக்கி, இந்திய நிறுவனத்தினரிடமிருந்து பெற்றுக் கொண்டது போல , மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து விடுவித்து அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனத்திற்கு விற்பனை செய்தது குறித்து விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.