வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் சந்தேகநபர் கைது.

ஜப்பானில் தனிப்பட்ட வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 1.6 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பாணந்துறையைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குளியாப்பிட்டி விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் தொழில் வாங்கித் தருவதாக கூறி சந்தேகநபர் ஒருவரிடம் 1,619,000 ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.