கோடிக் கணக்கான சொத்துகளை தீயிட்டு கொளுத்த ஒப்பந்தம் போட்டவர் பெல்ஜியத்தில் வாழும் யாழ்பாண பெண்னொருவராம் …

பெல்ஜியத்தில் வசிக்கும் யாழ்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒப்பந்தம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரமாண்ட துணி கடைக்கு தீ வைத்துள்ளது குறித்து போலீசார் கண்டறிந்து , சம்பந்தப்பட்ட மூவரை கைது செய்துள்ளனர்.

யாழ்.நகரில் தீயினால் நாசமான ஜவுளிக்கடை, ஒப்பந்தத்தின் பேரில் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும், அதற்கான ஒப்பந்தம் பெல்ஜியத்தில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் , யாழ்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர்கள் மூவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன், இந்த ஜவுளிக்கடை எரிந்ததில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிப் பொருட்களும், கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமானது.

பெல்ஜியத்தில் உள்ள யாழ்ப்பாணப் பெண்ணுக்கும், யாழில் ஜவுளிக் கடை நடத்தும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலுக்காக பழிவாங்கவே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு நபர் ஒருவர் வழங்கிய தகவலின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிட்ட நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பொலிசார் இவரை கைது செய்து விசாரணை செய்த போது, ​​தற்போது பெல்ஜியத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் இக்கடையை தீயிட்டு கொளுத்த , சந்தேகநபர் மற்றும் இருவருக்கு 12 இலட்சம் ரூபா ஒப்பந்தம் வழங்கியது தெரியவந்துள்ளது.

ஒப்பந்தத்தின் முதற்பகுதியில் ஏழு இலட்சம் ரூபா தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், இச்சந்தேக நபர் பெற்ற தொகையில் ஒன்றரை இலட்சம் ரூபா வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் கொடுத்த பணத்தில் இருவரும் வாங்கிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களது வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இரண்டு வாள்கள் மற்றும் நான்கு கத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், கடைக்கு தீ வைக்கச் சென்ற சந்தேகநபர்கள் இந்த வாள்கள் மற்றும் கத்திகளையும் உடன் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் செய்திகள் :

கொள்ளுப்பிட்டி இளைஞர் அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கிப் பலி!

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சாவு!

தோல்வியை எதிர்பார்ப்பவர் கடைசி நேரத்தில் வாபஸ்? அடுத்த இரு வருடங்களின் பின்னர் தமிழரசின் தலைமையைப் பெறுவதற்குத் தந்திரத் திட்டம்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு.

ரணில் ஜனாதிபதி பதவியில் நீடிக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதிகம் விருப்பமாம் – விமல் எம்.பி. கண்டுபிடிப்பு.

ரணில் ஜனாதிபதி பதவியில் நீடிக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதிகம் விருப்பமாம் – விமல் எம்.பி. கண்டுபிடிப்பு.

மோடியின் இராமேஸ்வர வருகையையொட்டி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை.

பிணத்தை வைத்து பிழைப்பு நடத்திய மாநகர சபைப் பணியாளர் மாட்டினார் – ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியல்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி உட்பட அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள பல்வேறு அரச தலைவர்களுடன் ரணில் சந்திப்பு.

புதிய பொலிஸ் வழிகாட்டுதல்கள்: சாதாரண உடையில் கடமைகளைச் செய்யும்போது சோதனைக்காக வாகனங்களை நிறுத்த முடியாது – காவல்துறை.

மொட்டு கட்சி, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை துரத்திய மக்கள்.

ராமா் கோயில் விழா: கடுமையான விரதத்தில் மோடி! இளநீா் மட்டுமே உணவு; தரையில் உறக்கம்

Leave A Reply

Your email address will not be published.