பொன்சேகா பொறுப்புடன் செயற்பட வேண்டும்! – சஜித்தின் கட்சி எச்சரிக்கை.

“ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் தவிசாளர் பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா பொறுப்புடன் செயற்பட வேண்டும். கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைப் பொதுவெளியில் பேசுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் நடத்தப்பட்ட பேரணியை சரத் பொன்சேகா விமர்சித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை கட்சியில் இணைத்துக்கொண்டமை குறித்தும் அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி என்பது தனிநபர்களின் சொத்து அல்ல என்று கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் அவர் சாடி வருகின்றார்.

இந்நிலையிலேயே ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.