பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (08) காலை தொடங்கியது.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படுகிறது.

மில்லியன் கணக்கான பாகிஸ்தானியர்கள் வாக்களிக்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் மொபைல் போன் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இது பாகிஸ்தானின் ஊழல் மிகுந்த தேர்தல் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.