1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம்.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஆண்டுதோறும் புதிய கல்வியாண்டிற்குச் செல்லும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தேவையுடைய 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது!

அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பிக்கவுள்ள நிலையில் இதுவரை மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 210 மாணவர்களுக்கு தலா ரூபா 3000/= பெறுபதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது!

அடுத்துவரும் நாட்களில், முல்லைத்தீவு,திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை,யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது!

Leave A Reply

Your email address will not be published.