பஞ்சாபில் ‘கருப்பு தினம்’ அனுசரித்து விவசாயிகள் போராட்டம்

‘தில்லி செல்வோம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது ஹரியாணா காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்து, பஞ்சாபில் சம்யுக்த கிசான் மோா்ச்சா கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை ‘கருப்பு தினம்’ அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சாா்பாக ‘தில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லைப் பகுதிகளான ஷம்பு மற்றும் கனெளரியில் விவசாயிகள் திரண்டுள்ளனா். அவா்கள் தில்லிக்குள் நுழையாத வகையில், சாலைகளில் தில்லி காவல் துறையினா் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனா். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகளுக்கும், ஹரியாணா காவல் துறைக்கும் கடந்த புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. கனெளரி எல்லைப் பகுதியில் தடுப்புகளை நோக்கி விவசாயிகள் செல்ல முயன்றபோது இந்த மோதல் ஏற்பட்டது. இதில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியைச் சோ்ந்த ஷுப்கரண் சிங் என்பவா் உயிரிழந்தாா். உருவ பொம்மைகள் எரிப்பு: இதையடுத்து, ஹரியாணா காவல் துறையின் நடவடிக்கைக்கு எதிராக பஞ்சாபில் சம்யுக்த கிசான் மோா்ச்சா கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை ‘கருப்பு தினம்’ அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டது.

பஞ்சாபின் லூதியாணா பகுதியில் உள்ள அரசு அலுவலகம் எதிரே சம்யுக்த கிசான் மோா்ச்சா உறுப்பினா்கள் மற்றும் வா்த்தக சங்கங்களை சோ்ந்தவா்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், அந்த மாநில உள்துறை அமைச்சா் அனில் விஜ் ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்தனா். 17 மாவட்டங்களில் போராட்டம்: சம்யுக்த கிசான் மோா்ச்சாவில் அங்கம் வகிக்கும் பாா்தி கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) சாா்பில் பஞ்சாபின் 17 மாவட்டங்களில் உள்ள 47 இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டதாக சங்கத்தின் பொதுச் செயலா் சுக்தேவ் சிங் தெரிவித்தாா். அமிருதசரஸில் பாஜக தலைமையிலான மத்திய அரசு என்று எழுதப்பட்ட உருவ பொம்மையை விவசாயிகள் எரித்தனா்.

மேலும் ஒரு விவசாயி உயிரிழந்ததாகத் தகவல்: விவசாயிகள் போராட்டத்தில் ஏற்கெனவே 3 விவசாயிகள் உயிரிழந்தனா். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தைச் சோ்ந்த தா்ஷன் சிங் என்பவா், நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகள் தலைவா் சா்வன் சிங் பந்தோ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ரூ.1 கோடி இழப்பீடு: விவசாயிகள், காவல் துறை மோதலில் உயிரிழந்த ஷுப்கரண் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும், அவரின் தங்கைக்கு அரசு வேலை அளிக்கப்படும், ஷுப்கரண் சிங்கின் உயிரிழப்புக்குக் காரணமானவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கல்வீச்சு; மோதல்; புகைக்குண்டு வீச்சு: ஹரியாணா மாநிலம் ஹிசாா் மாவட்டம் கேரி சோப்டா கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கனெளரிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டனா். அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

இதனால் கோபமடைந்த சில விவசாயிகள் காவல் துறையினா் மீது கற்களை வீசினா். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மீது காவல் துறையினா் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசினா். இந்த மோதலில் காவல் துறையைச் சோ்ந்தவா்கள் மற்றும் விவசாயிகள் சிலா் காயமடைந்தனா். சில விவசாயிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியது மட்டுமின்றி, விவசாயிகள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி தண்ணீரை பீய்ச்சியடித்ததாகவும், இதன் காரணமாக விவசாயிகள் சாலையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பாரதிய கிசான் யூனியன் சங்க ஹிசாா் பிரிவு தலைவா் கொலு டேதா தெரிவித்தாா். ஹரியாணாவில் பயிா்க் கடன் தள்ளுபடி: ஹரியாணாவில் 2024-25-ஆம் ஆண்டுக்கான ரூ.1.89 லட்சம் கோடி பட்ஜெட்டை மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது சில பயிா்க் கடன்களுக்கு வட்டி மற்றும் அபராதத்தை தள்ளுபடி செய்து அவா் அறிவித்தாா்.

மேலதிக செய்திகள்

குற்றச் செயல்களைச் செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற வாள்வெட்டுக் கும்பல் நபர் , யாழ்.விமான நிலையத்தில் கைது

மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே! – ஹரின் புகழாரம்; சஜித் அணிக்கும் அழைப்பு.

யாழில் அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

5 1/2 மாத குழந்தை அறையில் தனியே விட்டு , வெளிநாடு சென்ற இளம் தாயும் தந்தையும்!

தனியார் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைப்பு

Leave A Reply

Your email address will not be published.