சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி!

சீமாவரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் தனது மனைவியுடன் இன்று காரில் வந்துகொண்டிருந்தார்.

இவர்களுடைய கார் சீமாவரம் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரவிக்குமார் பலியானார். மேலும் அவரது மனைவியும் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நிர்மலா காயமடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன, கைதிகள் மாந்தீவுக்கு?

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுங்கள்! – இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்.

போலி விசாக்களுடன் நால்வர் சிக்கினர்!

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! 54 வயதான நபர் படுகாயம்!!

எமது எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்! – நீதி அமைச்சர் விஜயதாஸ சுட்டிக்காட்டு.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம்: அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிப்பதற்கு முடிவு!

அடையாளம் தெரியாத நான்கு சடலங்கள் மீட்பு!

எமது அரசு, பொதுமக்களின் சொத்துக்களை கையகப்படுத்த வந்தால் பொல்லால் அடியுங்க – அனுரகுமார திஸாநாயக்க

ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு 14 புதிய கோயில்கள் கட்டும் ரிலையன்ஸ்!

Leave A Reply

Your email address will not be published.