காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 30 பேருக்கு பிணை.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஆரியம்பதி பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட கொட்டகை போன்ற இடத்தில் ஒன்று கூடியிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 30 பேர் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மார்ச் 1 ஆம் திகதி காலை இந்த குழு கைது செய்யப்பட்டது. சில குற்றச் செயல்கள் அல்லது தேச விரோதச் செயலைச் செய்யும் நோக்கத்திற்காகக் கூடியிருந்ததாக சந்தேகத்தின் பேரில் குழு கைது செய்யப்பட்டது.

இவர்களது வாக்குமூலங்களை காத்தான்குடி பொலிஸார் பதிவுசெய்துள்ளதுடன், மட்டக்களப்பு பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (03) விடுத்துள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.