கோவை, சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, கோவை தனியார் பள்ளிகளுக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பள்ளியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பெற்றோர்கள் மத்தியில் ஒரு பதற்றமான மனநிலை காணப்பட்டது. பள்ளிகளுக்கு அடுத்தடுத்து மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில் அதனை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

முன்னதாக கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கும் நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

பிரேசில்-ஸ்பானிஷ் பெண் சுற்றுலாப் பயணி பாலியல் பலாத்காரம் : குற்றம் சாட்டப்பட்ட மூவர் இந்திய போலீசாரால் கைது (Video)

நாட்டை அதிரவைத்த பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: மத்திய உள்துறை போட்ட அதிரடி உத்தரவு

ஆஜராக தயார்… 8 சம்மன்களுக்கு பிறகு செவி சாய்த்த அரவிந்த் கெஜ்ரிவால்..!

ஊழியர்களை அலுவலகம் வரச் சொல்லும் டாப் 10 நிறுவனங்கள்

Leave A Reply

Your email address will not be published.