மீன்பிடிப்பதற்குச் சென்ற மூவரைக் காணவில்லை – கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு.

ஈச்சங்காடு பிரதேசத்திலிருந்து மீன்பிடிக்கக் கற்பிட்டி கடலில் இருந்து புறப்பட்ட படகொன்று மீண்டும் கரை திரும்பவில்லை என்று படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

ஈச்சங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூவர் இந்தப் படகில் மீன்பிடிப்பதற்காகச் சென்றிருந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடற்படையினருக்குத் தகவல் தெரிவித்துள்ள நிலையில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.