சபாநாயகருக்கு எதிரான பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில்…

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட 44 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அண்மையில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள திகதி குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவால் தீர்மானிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.