வாலாஜாப்பேட்டை அருகே காரில் குட்கா, பான்மசாலா கடத்தல்: 3 கார் பறிமுதல்; 4 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகே 3 காரில் கடத்திச் செல்லப்பட்ட 3 டன் குட்கா மற்றும் பான்மசாலாவை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடியில் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா அவர்களின் தலைமையில் போலீசார் சனிக்கிழமை காலை 5.30 மணியளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி அதி வேகமாக வந்த TN.21, BZ 1227 ஹூண்டாய், TN 37, CJ 7615 மகேந்திரா, GJ 27 BE 2835 க்ரெஸ்டா ஆகிய 3 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் பான்மசாலா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதில்,ராஜஸ்தான் மாநிலம்,கலோரிஸ் மாவட்டம் பரத்குமார்(22), ஜோத்பூர் மாவட்டம் கல்யாணராம் (26), சுரேஷ்(25),பாலி மாவட்டம் கணபத்ராம் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 டன் எடையுள்ள குட்கா மற்றும் பான்மசாலாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

“வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து! வழிபாட்டு உரிமையைத் தடுக்காதே!!” “பொய் வழக்குப் போடாதே! கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்!!” நெடுங்கேணி பொலிஸ் நிலையம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

நீதி கோரி வவுனியாவில் இன்று பெரும் போராட்டம்! – ஆதரவாக யாழில் இருந்து வாகனப் பேரணி.

கெஹலிய பிணை விண்ணப்பம் சமர்ப்பிப்பு! – திங்கள் பரிசீலனை.

ஓவியக் கண்காட்சிகளைப் பார்வையிட்டார் ரணில்!

மக்களுக்கு நன்மைகளை வழங்குங்கள்! – பிரதேச செயலாளர்களிம் ஜனாதிபதி கோரிக்கை.

வவுனியாவில் இன்றைய போராட்டத்தில் இணைந்துகொள்ள வருமாறு கைதானோரின் உறவினர்களும் அழைப்பு!

செங்கடலில் வணிகக் கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்.

ரம்ஜான் நோன்பு காலத்தில் காஸாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு.

Leave A Reply

Your email address will not be published.