இரண்டு சிறுவர்கள் ஆற்றில் மூழ்கிப் பலி – பெற்றோர் கண் முன்னால் சோகம்.

ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

காலி, யக்கலமுல்ல பிரதேசத்திலுள்ள பொல்வத்த ஆற்றில் மூழ்கியே இரண்டு சிறுவர்களும் பலியாகினர்.

உறவினர்களான 11, 14 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் (17) தமது பெற்றோர்களுடன் ஆற்றில் நீராட வந்தபோது இந்த அனர்த்தத்தில் சிக்கினர்.

நீரில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவர்கள், இமதுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்தனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.