செட்டிகுளம் பகுதியில் யானை தாக்கி முதியவர் பலி!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் இன்று (தெரிவித்தனர்.

செட்டிகுளம், மருதமடுப் பகுதியில் நேற்று மாலை வீதியால் பயணித்த முதியவரை அப் பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மேற்படி முதியவர் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

செட்டிகுளம், மருதமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய தனபாலகே அனுர தென்னக்கோன் என்பவரே மரணமடைந்தவராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.