போதைப் பொருள் பாவித்து பஸ்களை செலுத்திய 08 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது

போதைப் பொருள் பாவித்து விட்டு , போதையில் பஸ்களை செலுத்திய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு , புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கம்பஹா, மினுவாங்கொட மற்றும் குருநாகல் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் புறக்கோட்டை பென்ஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்க புர பஸ் நிலையங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 30 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது அவர்கள் அனைவரும் நீண்டகாலமாக போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.