பஸ்ஸுக்குள் மாணவியைச் சீண்டிய இளைஞன் கைது!

பலாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றில் 14 வயது மாணவிக்கு, அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞன் ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி மாணவி மாலை வகுப்பை நிறைவு செய்துவிட்டு தனது வீட்டுக்குச் செல்ல பஸ் ஆசனத்தில் அமர்ந்து இருந்தவேளை, அருகில் இருந்த இளைஞன் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டியுள்ளார்.

பஸ்ஸில் இருந்த பயணிகள் சிலர் இந்த விடயத்தை பலாங்கொடை பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து அந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞன், பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.