காட்டு யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாபச் சாவு!

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிக் குடும்பப் பெண் ஒருவர் சாவடைந்தார்.

இந்தச் சம்பவம் மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹயபுர பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றது.

44 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சம்பவத்தில் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனது வீட்டுப் பகுதிக்கு வந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட வேளையில் யானை தாக்கியதில் மேற்படி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மஹியங்கனைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.