தடை செய்யப்பட்ட பாமாயில் விற்ற சுங்க ஆய்வாளர் சிக்கினார்.

சுங்கத்தால் தடைசெய்யப்பட்ட மற்றும் மனித பாவனைக்காக துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 பாமாயில் கொள்கலன்களை திறந்த சந்தையில் விற்பனை செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் சுங்க பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். .

இந்த சுங்க பரிசோதகர் நாவல ராஜகிரியை சேர்ந்தவர். 33 வயதான இந்த சுங்க பரிசோதகர் கடந்த 26 ஆம் திகதி இரவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய நிறுவனம் ஒன்றின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட பாமாயிலுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படவில்லை என்றும், ஆனால் அதற்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டதாக பொய்யான தகவல்களை சமர்ப்பித்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையில் இரு சுங்க அத்தியட்சகர்கள், உதவி சுங்க அத்தியட்சகர் மற்றும் சிலர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டனர். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பலர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சில சுங்க அதிகாரிகள் எதிர்பார்த்த பிணையையும் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.