கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை : மாணவர்கள்.

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரமாக கார்த்திகைப் பூ தொடர்பில் விசாரணைக்கு வருமாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விசாரணைக்காக மூன்று மாணவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணையில் நீங்கள் இல்ல அலங்காரம் செய்தது கார்த்திகைப் பூவைத் தானே இதற்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள் தானே வழங்கினார்கள் என கேள்வி எழுப்பினார்.

இதன் போது பதில் வழங்கிய மாணவர்கள் நீங்கள் கூறுவதைப் போல குறித்த பூ கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை காந்தள் மலர் என அறிந்துள்ளோம் எமது பாடப்புத்தகத்தில் அவ்வாறே உள்ளது. அது மட்டுமல்லாது வருடத்தில் ஒரு முறை பூக்கும் அரிய மலர் அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காட்சிப்படுத்தினோம்.

Leave A Reply

Your email address will not be published.