இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற புத்தூர் வளர்மதி அணி.

இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற புத்தூர் வளர்மதி வீழ்ந்தது அச்சுவேலி விக்னேஷ்வரா.

அமரர் சிவகுருநாதர் ஞாபகார்த்தமாக இளவாளை வருத்தப்பட்ட வாலிபர்  சங்கத்தால் நடாத்தப்படும் கரப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியாட்டத்தில் அச்சுவேலி விக்னேஷ்வரா எதிர் புத்தூர் வளர்மதி மோதின.

இதில் முதல் இரு சுற்றுக்களையும் வளர்மதி இலாவகமாக கைப்பற்றிய போதும் 3வது சுற்றினை 23:25 என்ற வகையில் விக்னேஷ்வரா தன்வசபடுத்த 4வது சுற்றுக்கு போட்டி தயாராகியது! இதில் 25:15 என்ற புள்ளியிடைவெளியில் விக்னேஷ்வராவை வீழ்த்தி இறுதிக்கு தகுதிபெற்றது வளர்மதி.

Leave A Reply

Your email address will not be published.