மாட்டு திருடர்களுக்கு ஆப்பு : திருடும் ஒரு மாட்டுக்காக திருடனிடம் 10 லட்சம் அபராதத்துடன் சிறை.

இதுவுரை மாடுகளை திருடுபவர்களிடம் அபாராதமாக , மாடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயே அறவிடப்படுகிறது. அதை 10 லட்சமாக உயர்த்தவும் , பிணை வழங்க முடியாதபடியான சிறைத் தண்டனையாக மாற்றவும் கூடிய தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வர உள்ளதாக ,வேளாண்மை மற்றும் தோட்டத் தொழில்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கால்நடை உரிமையாளர்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் மாட்டு திருடர்களுக்கு மிக உயர்ந்த தண்டனை வழங்கப்படும் என்றும், தற்போது நடைபெற்று வரும் நீதி நடவடிக்கைக்கு இணையாக பசு திருடர்களை கைது செய்வதற்கும் இதே நடவடிக்கை எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அரச நிதியில் 650 மில்லியன் ரூபா செலவில் பொலன்னறுவை மனம்பிட்டிய பிரதேசத்தில் சிறிய அளவிலான பால் பதப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை கடந்த 5 ஆம் திகதி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர். விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு என்பனவற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலைய திறப்பு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘இருபது லிட்டர் பால் கறக்கும் பசுகளைக் கொன்று இறைச்சிக்காகப் பயன்படுத்திய சம்பவங்கள் இருப்பதைப் பத்திரிகையில் பார்த்தேன், கறவை மாட்டைக் கொல்வதை மனிதனைக் கொன்றதாகவே கருதுகிறேன். சில குடும்பங்களின் வாழ்வாதாரம் அந்த கால்நடையாக இருக்கலாம். சட்டம் திருத்தப்படும் வரை, மாடு திருடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். ஆபரேஷன் ஜஸ்டிஸ் மூலம் காவல்துறைக்கு அதிக மரியாதை கிடைத்துள்ளது. இப்போது இந்த பசுக்களைப் பாதுகாக்கும் திட்டத்திற்கு நீதி இயக்கத்தை பயன்படுத்துவோம். ” என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.