அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து – 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி!

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சித்ரா. இவர்கள் தங்களது 60-வது திருமண நாளை கொண்டாடுவதற்காக திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அதன்படி, வெள்ளகோவிலை கடந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சந்திரசேகர் ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சந்திரசேகர் சித்ரா மற்றும் இளவரசர், அரிவித்ரா மூன்று மாத குழந்தை சாக்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு நபர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்து காரணமாக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் கார் மற்றும் பேருந்தை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.

இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

பாடசாலை மாணவர்கள் STF சீருடைகள் பயன்படுத்திமை குறித்து விசாரணை : ஒருவர் கைது (Video)

ஈரான் தூதரகப் பணிமனை மீது தாக்குதல் : மற்றுமொரு போர் முனை?

நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.

கடல் வழியாக பயணித்த படகு கவிழ்ந்த விபத்தில் 90 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையம் மீது ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல்.

சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் மது… தேர்தல் வாக்குறுதியால் மதுப்ரியர்கள் மகிழ்ச்சி

பாலின மாற்று அறுவை சிகிச்சை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Leave A Reply

Your email address will not be published.