சிட்னியின் புறநகர் பகுதியில் கத்திக்குத்து… 06 பேர் பலி… உயிரிழந்தவர்களில் 9 மாத குழந்தையும் அடக்கம்…(வீடியோ)

அவுஸ்திரேலியாவின் சிட்னியின் கிழக்கு புறநகர் பகுதியான வெஸ்ட்ஃபீல்ட் போண்டியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் பொலிஸார் இன்று (13) தெரிவித்தனர்.கொலையாளி இறுதியில் சம்பவ இடத்திலேயே போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 3.20 மணியளவில் ஷாப்பிங் சென்ற போது இடம்பெற்ற இந்த படுகொலையில் ஒரு பெண்ணும் அவரது ஒன்பது மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். கொலையாளி இந்த கத்திகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை தாக்கியுள்ளார்.

அச்சமடைந்த மக்கள் ஓடும் போது , கொலையாளி துரத்திச் சென்று கத்தியால் குத்தியுள்ளான்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் பலத்த காயம் அடைந்தனர்.

அந்த நபர் தனியாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர் 40 வயதுடையவர் என நம்பும் பொலிசார், அவரது அடையாளம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தீவிரவாத தாக்குதல் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அவர்கள் கூறுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.