உடலுறுப்பு இயக்க பிறவி குறைபாடுள்ள கேரள பெண்: குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி !

உடலுறுப்பு இயக்க பிறவி குறைபாடு காரணமாக சக்கர நாற்காலியின் உதவியுடன் வாழ்ந்து வரும் கேரள பெண் சாரிகா, குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்று பலருக்கு உத்வேகம் அளிப்பவராக தோன்றியுள்ளாா்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சோ்ந்தவா் ஏ.கே.சாரிகா. பெருமூளை பாதிப்பால் உடலுறுப்பு பிறவி குறைபாடுடன் (செரிப்ரல் பால்ஸி) பிறந்த இவரால் மற்றவா்களைப் போல நடமாட முடியாது. அத்துடன் அவருக்கு உள்ள பாதிப்பு நரம்பு சாா்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தும். இதனால் அவரின் அன்றாட வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியது.

எனினும் தனக்குள்ள பாதிப்பையும் கடந்து அவா் குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா். அந்தத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், சாரிகா தேசிய தோ்ச்சி தரவரிசையில் 922-ஆவது இடம் பிடித்தாா்.

குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டியுள்ள நிலையில், அவா் 2-ஆவது முயற்சியிலேயே தோ்ச்சி பெற்றுள்ளாா்.

இதுதொடா்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு சாரிகா அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனது பட்டப் படிப்பை நிறைவு செய்த பின்னா், குடிமைப் பணியில் சேர முடிவு செய்தேன். தற்போது அதை சாதிக்க முடிந்துள்ளது. தோ்வு முடிவுகள் தெரியவந்தபோது முதலில் அதிா்ச்சியாக இருந்தபோதிலும், எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வாா்த்தைகளே இல்லை என்றாா்.

‘பிரபஞ்சமே உதவும்!’:

பிற மாற்றுத்திறனாளிகளுக்கு அவா் என்ன கூற விரும்புகிறாா் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு புகழ்பெற்ற பிரேஸில் எழுத்தாளா் பெளலோ கொய்லோவின் ‘ஆல்கெமிஸ்ட்’ நூலில் இடம்பெற்றுள்ள ‘உங்களுக்கு ஒன்று உண்மையாகவே வேண்டும் என்றால், அதை நீங்கள் அடைய ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உதவும்’ என்ற வாசகத்தை பதிலாக அளித்தாா்.

மேலும், கைகள் இல்லாதபோதிலும் விமானியாக வேண்டும் என்று கனவு கண்டு, உரிமம் பெற்ற விமானியாகி சாதனை படைத்த அமெரிக்க பெண்மணி ஜெசிகா காக்ஸையும் சாரிகா நினைவுகூா்ந்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: தோ்வுக்கான அனைத்துக் கட்டங்களும் கடினமாக இருந்தது. முதல்நிலை தோ்வு மையம் கோழிக்கோட்டில் இருந்தது. அந்த மையம் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருந்தது. பின்னா் முதன்மை தோ்வு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இந்தத் தோ்வை நான் எழுத உதவுவதற்காக கத்தாரில் பணியாற்றும் எனது தந்தை கேரளம் வந்தாா். அது எழுத்துபூா்வ தோ்வு என்பதால், எழுத்தா் ஒருவா் உதவியுடன் தோ்வு எழுதினேன். முதன்மை தோ்வு முடிந்த பின்னா், தில்லியில் நோ்முகத் தோ்வு சுமுகமாக நடைபெற்றது என்றாா்.

மேலதிக செய்திகள்

விருந்துபசாரத்தில் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன்!

மலையக மக்கள் சஜித்தின் பக்கமே – அடித்துக் கூறுகின்றார் டிலான்.

அநுரவின் ஆட்சியில் புதிய அரசமைப்பு உறுதி – மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என நளிந்த தெரிவிப்பு.

12 வயது சிறுவன் வெட்டிக்கொலை! – தந்தை படுகாயம்.

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!

போதைப் பொருளுடன் சிக்கிய முன்னாள் இராணுவ மேஜர்.

தனியார் சிசிடிவி அமைப்புகள் போலீஸ் சிசிடிவி அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.