ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!

மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கொண்டு சென்ற இளைஞன் ஒருவர் மஹியங்கனை ரம்புக்யாய பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் 26 வயதுடைய மஹியங்கனை, பதியத்தலாவ வீதி 47, கட்டையில் வசிக்கும் நபர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருளை பொதி செய்து மஹியங்கனை பகுதியில் உள்ள உள் வீதிகளில் சென்று விற்பனை செய்கின்றார் என்று மஹியங்கனைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட 74 ஆயிரம் ரூபா பணமும். மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மஹியங்கனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.