ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

தெலங்கானாவின், பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயதுக் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

தெலங்கானாவின் பல பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த நிலையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த தடுப்புச்சுவர் அருகே கட்டட தொழிலாளர்கள் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழைக்கு தடுப்புச்சுவர் அருகே தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை மீது தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் 4 வயதுக் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

மீண்டெழுந்துவிட்டது ஐ.தே.க.! – இனித்தான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும் என்கிறார் பாலித.

நிரந்தர அரசியல் தீர்வு இல்லாமல் எவ்வித நல்லிணக்கமும் ஏற்படாது! – நாடாளுமன்றத்தில் சுமந்திரன் சுட்டிக்காட்டு.

ரணிலுக்கு ஆதரவா? – இன்னும் முடிவில்லை என்கிறார் மஹிந்த.

விசா மோசடி மத்திய வங்கி மோசடியை விட பன்மடங்கு அதிகம்! – ஹக்கீம் தெரிவிப்பு.

நீதிமன்றத்தை அவமதிக்கும் லால்காந்தவின் கருத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!

புதிய விசா முறைமை ஊடாக வருடாந்தம் 1800 கோடி ரூபா மோசடி! – சபையில் அம்பலப்படுத்திய சம்பிக்க.

விசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி கொடுத்தால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்! – அரசுக்கு ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை.

புதிய சோதனையில் 6G வேகம் 100 Gbps ஐ எட்டியது : வேகம் சராசரி 5G செல்போன்களை விட 500 மடங்கு.

புடின் ஐந்தாவது முறையாக நேற்று பதவியேற்றார்!

ரணில் செல்லும் பாலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் NPP அரசாங்கமும் முன்னோக்கி செல்லும்..- அனுர.

யாழ் வெப்ப பாரிசவாத இறப்புக்கள் அதிகரிப்பு.. முதியவர்கள் தொடர்பில் அவதானம்.. வைத்திய நிபுணர் பேரானந்தராஜா.

அவசர அவசரமாக சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர்! இதான் ஐபிஎல் ஸ்க்ரிப்ட்?

வேகமாக பரவும் மர்ம நோய்… கொத்து கொத்தாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மக்கள்!

Leave A Reply

Your email address will not be published.