தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

மும்பையில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செய்திகளில் அதிகம் பேசுபொருளாக மாறியுள்ளது ஷவர்மா. தொடர்ந்து பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

மும்பையில் புதிதாக ஒரு இளைஞர் ஷவர்மாவால் உயிரிழந்துள்ளார். இறந்தவர் பிரதமேஷ் போக்சே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், கடந்த மே 3ஆம் தேதி ட்ரோம்பே பகுதியில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மாவை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

மே 4 அன்று போக்சே வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்டுள்ளார். மருத்துவச் சிகிச்சை பெற அருகிலுள்ள நகராட்சி மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமானதையடுத்து குடும்பத்தார் மே 5 அன்று கேஇஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார். ஆனால் தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஞாயிறன்று மாலை மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார்.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உயிரிழப்புக்கு கடைசியாக சாப்பிட்ட ஷவர்மா தான் காரணம் என்று மருத்துவர்கள் உறுதி செய்ததையடுத்து விற்பனையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக செய்திகள்

மீண்டெழுந்துவிட்டது ஐ.தே.க.! – இனித்தான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும் என்கிறார் பாலித.

நிரந்தர அரசியல் தீர்வு இல்லாமல் எவ்வித நல்லிணக்கமும் ஏற்படாது! – நாடாளுமன்றத்தில் சுமந்திரன் சுட்டிக்காட்டு.

ரணிலுக்கு ஆதரவா? – இன்னும் முடிவில்லை என்கிறார் மஹிந்த.

விசா மோசடி மத்திய வங்கி மோசடியை விட பன்மடங்கு அதிகம்! – ஹக்கீம் தெரிவிப்பு.

நீதிமன்றத்தை அவமதிக்கும் லால்காந்தவின் கருத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!

புதிய விசா முறைமை ஊடாக வருடாந்தம் 1800 கோடி ரூபா மோசடி! – சபையில் அம்பலப்படுத்திய சம்பிக்க.

விசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி கொடுத்தால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்! – அரசுக்கு ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை.

புதிய சோதனையில் 6G வேகம் 100 Gbps ஐ எட்டியது : வேகம் சராசரி 5G செல்போன்களை விட 500 மடங்கு.

புடின் ஐந்தாவது முறையாக நேற்று பதவியேற்றார்!

ரணில் செல்லும் பாலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் NPP அரசாங்கமும் முன்னோக்கி செல்லும்..- அனுர.

யாழ் வெப்ப பாரிசவாத இறப்புக்கள் அதிகரிப்பு.. முதியவர்கள் தொடர்பில் அவதானம்.. வைத்திய நிபுணர் பேரானந்தராஜா.

அவசர அவசரமாக சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர்! இதான் ஐபிஎல் ஸ்க்ரிப்ட்?

வேகமாக பரவும் மர்ம நோய்… கொத்து கொத்தாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மக்கள்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

Leave A Reply

Your email address will not be published.