பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என ஜனாதிபதி கூறினார் – பசில்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதே பொருத்தமானது என தமது கட்சி இன்னமும் நம்புவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவில் பசில் ராஜபக்ஷ உரையாற்றிய போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேறு நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி முன்னிலையில் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், முதலில் எந்தத் தேர்தலை நடத்தினாலும் அதற்கு தயாராகுமாறு பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.