பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை அதிபர் கைது!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நிகவெரட்டிய கபல்லாவ உயர்தரப் பாடசாலையின் அதிபர், கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய 17 வயதுடைய மாணவியே சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக நிகவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, குறித்த அதிபர் நேற்று (30) பிற்பகல் நிகவெரட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரான அதிபர் மாணவியுடன் காதல் தொடர்பு வைத்து இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 52 வயதுடைய சந்தேக நபரான அதிபர் இன்று (31) நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.