கிணறு ஒன்றிலிருந்து உள்ளக புலனாய்வுதுறை அதிகாரியின் சடலம்.

கஞ்சாவை பிடிக்க சென்ற இராணுவ புலனாய்வாளர் பலி.

வீட்டு கிணறு ஒன்றிலிருந்து உள்ளக புலனாய்வுதுறை அதிகாரியின் சடலம் இன்று (09) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா  பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்தே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ புலனாய்வு அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பட்டைக்காட்டு பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நேற்று (08)மாலை இராணுவ உள்ளக புலனாய்வாளர்களுக்கு இரகசியமாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த இராணுவ உளவுதுறை அதிகாரி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை தேடி அப்பகுதிக்கு சென்ற ஏனைய உளவுதுறை அதிகாரிகளால் இந்த சடலம் மீட்கப்பட்டது.

குறித்த இராணுவ உளவுத்துறை அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி தேடுதலின் போது தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்தாரா அல்லது திட்டமிட்ட கொலையா என பல பல்வேறு கோணங்களில் வவுனியா பொலிஸாரும், இராணுவ உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.