310 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து குழந்தை பலி!

310 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து குழந்தை பலி! ஐவர் படுகாயம்.

ஹப்புதளை பகுதியில் விகாரகலை என்ற இடத்தில் ஆட்டோவொன்று விபத்திற்குள்ளாகியதில் ஒன்றரை வயது குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது. ஆட்டோ ஓட்டுநனர் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, நேற்று (14) மாலை 6 மணியளவில் பெரகலை–வெள்ளவாயா பிரதான வழியில் கீழ்விகாரகலை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டுநர் உட்பட ஆறுபேர் பயணித்த இவ் ஆட்டோ, பாதையைவிட்டுவிலகி 310 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் ஒன்றரை வயதுடைய சிறுவன், ஸ்தலத்திலேயே பலியானார். ஒருபெண் உட்பட ஐந்து பேர் கடுங்காயங்களுக்குள்ளாகி, ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைஅரசினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமுற்று ஆபத்தான நிலையிலுள்ள இருவர், தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏனைய மூவர், ஹப்புத்தளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.