தற்காலிகமாக மூடப்பட்டது வவுனியா வைத்தியசாலை

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில்
இருந்த மூவருக்குக் கொரோனாத் தொற்று

வவுனியா, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மூவருக்கும் கொரோனாத் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு நோயாளர் வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளன. தாதியர்கள், வைத்தியர்கள் மட்டும் உட்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவும், கிளினிக்காகவும் வருகை தந்த பலரும் திரும்பிச் சென்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.