ஓய்வூதியம் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.. உயர்வில்லை.. போன மாத சம்பளமே!

ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் நாளைக்குள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

இருப்பினும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் மேற்கொண்ட சம்பளத் திருத்தம் தொடர்பான ஓய்வூதிய உயர்வு எதுவும் இடம்பெறவில்லை என்று ஓய்வூதியதாரர்கள் கூறுகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் கிடைத்த சம்பளமே இந்த முறையும் ஓய்வூதியக் கொடுப்பனவாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.