ஓயாத ‘மூன்றாம் அலை’ இன்றும் 383 பேர் இலக்கு

இலங்கையில் இன்றும் 383 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மினுவாங்கொடை, பேலியகொட கொரோனா கொத்தணிகள் ஊடான பரவலின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக உயர்வடைந்துள்ளது.

5 ஆயிரத்து 918 தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனாத் தொற்று சந்தேகத்தில் 429 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாத் தொற்று காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.