ஜெயபுரம் வடக்கு, தெற்கு பகுதிகள் ஒரு நாள் தற்காலிக சமூக முடக்கம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நபர் சமூக முடக்கலை மீறிச் செயற்பட்டமை அம்பலமானதால் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பகுதிகள் ஒரு நாள் தற்காலிக சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜெயபுரம் கிராம சேவையாளர் பிரிவே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. மாதிரி பரிசோதனைகள் இடம்பெறுவதற்காக இவ்வாறு சுகாதார தரப்பினால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கிராமத்திற்கு உட்செல்லல் மற்றும் வெளியேறல் ஆகியன தடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலினை பூநகரி பிரதேச செயலாளர் எஸ். கிருஸ்ணேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியமையால் குறித்த அவசர அறிவிப்பு இன்று (08.11.2020) இரவு பொது மக்களிற்கு ஒலிபெருக்கிகள் ஊடாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.