பன்னிப்பிட்டியவில் அதிகாலை துயரம் கோர விபத்தில் ஒருவர் பலி; மூவர் காயம்.

கொழும்பு – ஹைலெவல் வீதியின் பன்னிப்பிட்டிய பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்னிப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைய முயன்ற ஓட்டோ ஒன்றுடன் மோதுவதைத் தவிர்க்க பஸ் சாரதி முயற்சித்துள்ளார். இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும், ஏனைய இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் எனவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து காரணமாக ஹைலெவல் வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னிப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.