மாவீரர் நினைவேந்தல் தடை கோரி வடக்கில் 6 நீதிமன்றங்களில் இன்று ஒரே நாளில் மனுக்கள்.

மாவீரர் நினைவேந்தல் தடை கோரி
வடக்கில் 6 நீதிமன்றங்களில்
இன்று ஒரே நாளில் மனுக்கள்

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக்கோரி வடக்கு மாகாணத்தில் 6 நீதிமன்றங்களில் இன்று ஒரே நாளில் பொலிஸாரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வவுனியா, மன்னார், பருத்தித்துறை, மல்லாகம், யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய நீதிவான் நீதிமன்றங்களிலேயே குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதற்கமைய வவுனியா, மன்னார் நீதிவான் நீதிமன்றங்கள் பொலிஸார் கோரிய கட்டளையை வழங்கிய அதேநேரம் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றங்கள் மனுக்களுக்குத் திகதியிட்டு அதனை ஒத்திவைத்தன.

சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றங்கள் குறித்த விடயம் தொடர்பான மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி பொலிஸார் இன்று தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

Leave A Reply

Your email address will not be published.