இலங்கை ஜனாஸாக்களை புதைக்க மாலைதீவு தயார்?

இலங்கை ஜனாஸாக்களை
புதைக்க மாலைதீவு தயார்?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசு  சம்மதம் தெரிவித்திருக்கின்றது எனப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளினை மாலைதீவு அரசு ஏற்றுக்கொண்டு பதிலளித்திருக்கின்றது எனவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதால் முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன.

இதனால் முஸ்லிம் மக்கள் பலரும் கொரோனாப் பரிசோதனையை நடத்த முன்வரவில்லை.

இதனிடையே ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியிலிருந்து விலகப்போவதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்படி பிரச்சினைகளுக்குத் தீர்வாக இலங்கை அரசு, மாலைதீவிடம் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அந்த நாட்டு அரசு சம்மதம் தெரிவித்திருக்கின்றது எனத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.