உக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கு சில சுற்றுலா ஸ்தலங்களுக்குச் செல்ல தடை..!

உக்ரைன் நாட்டில் இருந்து, நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு, நாட்டில் சில சுற்றுலா ஸ்தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சீகிரியா மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளுக்கு உக்ரைனிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் சென்றிருந்தமையால், உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, சீகிரியா மற்றும் பொலன்னறுவை பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை, உக்ரைன் நாட்டில் இருந்து, வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்குசெல்ல ஏற்பாடு செய்திருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டவர்களுக்காக குறித்த பகுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே இவ்வாறு சுற்றுலா பயணிகளின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.