ஜோ பைடன் பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை போட்டுக் கொண்டார்.

பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை, அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் போட்டுக் கொண்டார்.

உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக்கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், பரவல் அதிகமானது. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். விரைவில் பதவி ஏற்க உள்ள அவர், பதவியேற்றதும் முதல் 100 நாளில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசியான பைசர் மருந்தின் முதல் டோஸை, நேரலையில் மருத்துவமனை ஒன்றில் போட்டுக்கொண்டார். இந்நிலையில், தற்போது 2வது டோஸை, அவர் செலுத்திக் கொண்டுள்ளார். ‘மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க செய்வது தான் தனது முக்கிய பணி’ என தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.