தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள சீன ஜனாதிபதிக்கு கோட்டாபய கடிதம்.

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள சீன ஜனாதிபதிக்கு கோட்டாபய கடிதம்.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குக்குக் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கடிதத்தை சீனாவுக்கான இலங்கையின் தூதுவர் பாலித கோஹன, சீன வெளிவிவகார அமைச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்குக் கையளித்துள்ளார்.

இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் இலங்கைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, 70 வீதமான பொதுமக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை அல்லது தற்போது காணப்படும் இரண்டாம் அலையின் பரவல் நிலைமைகள் மேலும் விரிவடைய இடமளிக்காது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.